மெய்யுணர்வுச் சந்தம்
என்னை அனுபவித்தே
அனைத்தும் உயிர்பெறுகின்றன.
என்னில் பிறந்து,
என்னுள் மறைகின்றன.
வாழும் நொடிகளிலும்
எனைச் சார்ந்தே சுழல்கின்றன.
நொடிப்பொழுது ஆயுள்கொண்டு
யுகயுகமாய் வாழ்ந்தாலும்
பிறவாத என் தயவில்
தனதிருப்பை அடைகின்றன.
————————————————