அறியாமை
ஆர்பரித்து கரைதொட முனையும் வெண்பஞ்சு நுரைகளாய்
எத்தனை முறை நிகழ்ந்தும் அடங்காத ஆக்ரஹம்.
இலக்கு எட்டப்பட்டதா? இல்லை பிரயத்தனமே இலக்கா?
அளப்பரியா எல்லையினை ஆட்கொள்ளும் எத்தனிப்போ!
முயற்சிப்பிழையா? அல்லது உருவகப்பிழையா?
எதன் பிழை திருத்த இந்த தொடர்முனைப்பு?
அலையெனும் வடிவினுள் உருவகித்து சிக்கிய
முழுநிறை பேராழியின் அறிவிலிப் போராட்டம்!
——————————————————————