எனதிறை

அதுவில் நிலைத்தவன்

அதுவாய் சுடர்பவன்

அதற்குப் பிறிதாய் எதுவுமிலாதவன்!


எதுவில் அமர்ந்ததனால் 

அவன் அதுவோ

அதுவில் எமதும் அமரட்டும்!


எதுவாய் ஒளிர்வதனால் 

அவன் இறையோ

அதுவாய் எமதும் சுடரட்டும்! 


எதன் சாயலாய்

அது பலவோ

அதனில் எமதும் கலக்கட்டும்!

————————————————-