(9) ஸ்ரவணம் (சாஸ்திரம் கேட்டல்):
உபநிஷத்தில் பேசப்படும் கருத்துக்களை நான்காகப் பிரிக்கலாம்:
[1] ஜீவ விசாரம் [2] ஈஷ்வர விசாரம் [3] ஜீவ – ஈஷ்வர சம்பந்தம் [4] பல விசாரம்
[1] ஜீவ விசாரம்:
ஜீவன் – உயிர் வாழ்பவன் (நான்), ஜீவன் = ஆத்மா + அனாத்மா.
ஆத்மா - சேதனத் தத்துவம், அறிவு, Consciousness
அனாத்மா - அசேதனத் தத்துவம், அறிவற்றது, ஜட சொரூபம்.
(i) அனாத்மா
1. ஸ்தூல சரீரம் (உடல்):
பஞ்ச பூதங்களினால் (ஆகாசம், வாயு, அக்னி, நீர், ப்ருத்வி) செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியம், நிறம், பாலினம் முதலிய வேறுபாட்டிற்கு காரணம் அவரவர்களின் கர்ம பலன்.
ஸ்தூல உடல் அடையும் 6 வித மாறுபாடுகள்:
Ø அஸ்தி - காரணமாக கர்பத்தில் இருத்தல் (தாயினுடைய வயிற்றில்)
Ø ஜாயதே - பிறத்தல்
Ø வர்ததே - வளர்தல்
Ø விபரிணமதே - மாற்றத்தை அடைதல் (வளர்ச்சி நின்ற பிறகு)
Ø அபக்ஷீயதே - தேய்தல்
Ø வினஷ்யதி - மடிதல்
போகத்தை அனுபவிக்கும் வீடு ஸ்தூல சரீரம் (போக ஆயதனம்).
2. சூக்ஷம சரீரம் (மனம்):
போகத்தை அனுபவிக்கும் கருவி சூக்ஷம சரீரம்(போக சாதனம்).
19 அவையவங்கள் சேர்ந்தது சூக்ஷம சரீரம். அவை
3. காரண சரீரம் (நிர்விகல்ப சொரூபம்):
எது ஸ்தூலத்திற்கும், சூக்ஷமத்திற்கும் காரணமோ(எதிலிருந்து ஸ்தூல சூக்ஷமம் வந்ததோ) அதுவே காரண சரீரம். மரத்திற்கு விதை எப்படி காரணமோ அதுபோல. விதையில் கிளை, இலை, கொடி என்ற வேறுபாடு கிடையாது.
* நிர்விகல்பம் – விகல்பம் அற்றது – வேறுபாடு அற்றது
* எப்போது தோன்றியது எனில் அநாதி, அதாவது அதன் தோற்ற காலத்தை கூற முடியாது.
=> பஞ்ச கோஷம்:
இந்த மூன்று சரீரமும் சேர்த்து ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. அது பஞ்ச கோஷம் எனப்படும்.
கோஷ: - உறை (அனாத்மா ஆத்மாவை உறை போல மறைப்பதால்)
(i) அன்னமய கோஷம் - ஸ்தூல சரீரம்
(ii) பிராணமய கோஷம் – 5 பிராணன் + 5 கர்மேந்திரியங்கள்
(iii) மனோமய கோஷம் – மனம் + 5 ஞானேந்திரியங்கள்
(iv) விக்ஞானமய கோஷம் – புத்தி + 5 ஞானேந்திரியங்கள்
(v) ஆனந்தமய கோஷம் – காரண சரீரம்
=> அவஸ்தா த்ரயம் (ஜீவனுக்குள்ள மூன்று வித அனுபவங்கள்):
(i) ஜாக்ரத் – விழிப்பு நிலை (waking state) [ஸ்தூல உடல் வரை அபிமானம் இருக்கும்போது]
(ii) ஸ்வப்ந – கனவு நிலை [சூக்சம சரீரம் வரை அபிமானம்]
(iii) சுசுப்தி – ஆழ்ந்த உறக்கம் (காரண சரீர அபிமானம்; அறியாமை + ஆனந்தம்)
(ii) ஆத்ம விசாரம்
ஆத்மா ஞான(அறிவு) சொரூபம்.
ஆத்மாவின் லக்ஷணங்கள்:
(i) த்ருக் - அறிபவன்
(ii) சித் – அறிவு மயம்
(iii) நிர்விகாரம் - மாற்றமற்றது
(iv) ஏகம் - ஒன்று
(v) ஸத்யம் - உண்மை
அனாத்மாவின் லக்ஷணங்கள்:
(i) த்ருஷ்யம் - அறியப்படுவது
(ii) ஜடம் – அறிவற்றது
(iii) ஸவிகாரம் - மாறுவது
(iv) அனேகம் - பலவானது
(v) மித்யா – வெறும் தோற்றம்
* ஆத்மா மற்றும் அனாத்மாவிற்கிடையேயான சம்பந்தம் என்ன?
(1) ஸ்படிகம் – மலர்; ஸ்படிகத்தில் எதிரொலிக்கும் மலரின் நிறத்தை போன்று அனாத்மா ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
(2) கயிறு - பாம்பு; மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரியும் பொய்யான பாம்பை போல அறியாமையினால் அதிஷ்டானமான ஆத்மாவின் மீது மித்யாவான அனாத்மா தெரிந்து கொண்டுள்ளது.
[2] ஈஷ்வர விசாரம்:
இந்த உலகிற்கு காரணமானவர்.
ஈஷ்வரன் = ப்ரம்ம (சேதன) + மாயா (அசேதன)
=> ஜட சொரூபமான மாயையின் லக்ஷணங்கள்:
(i) த்ரி குண ஆத்மிகா (சத்வம், ரஜஸ், தமஸ்)
(ii) காரண பிரபஞ்சம் (ஸ்தூல, சூக்ஷம, காரணம்)
(iii) அநாதி ( தோற்றம் கிடையாது)
(iv) ப்ரம்மாஸ்ரயம் (ப்ரம்மத்தை சார்ந்து உள்ளது, தனித்து செயல்படாது)
மாயையும், ப்ரம்மமும் சேரும் தத்துவம் => ஜகத் காரணமானவர்
ஈஷ்வரன் 2 வகையான காரணமாகவும் இருந்து இந்த உலகைப் படைத்துள்ளார்.
=> சிருஷ்டி:
ஈஷ்வர மாயா அம்சத்திலிருந்து சிருஷ்டி தோன்றுகிறது.
காரண நிலை ---> சூக்ஷம நிலை ---> ஸ்தூல நிலைபஞ்ச சூக்சம பூத சிருஷ்டி:
மூன்று குணத்தை (சத்வ, ரஜஸ், தமஸ்) உடைய 5 சூக்சம பூதங்கள் தோன்றியது.
=> மூன்று குணங்களின் தன்மைகள்:
(i) சத்வம் => அறிவு, ஞானம் (Power to know)
(ii) ரஜோ => செயல்படும் சக்தி (Activity – Power to act)
(iii) தமோ => ஜட தன்மை
=> பிரபஞ்ச தோற்றம்:
ஐந்து சூக்சம பூதங்களின்,
* சத்வ குணத்திலிருந்து => ஜீவர்களின் அந்தக்கரணம் + 5 ஞானேந்திரியங்கள் வந்தன.
* ரஜோ குணத்திலிருந்து => கர்மேந்திரியங்கள் + ப்ராணன் படைக்கப்பட்டது.
* தமோ குணத்திலிருந்து => ஸ்தூல சரீரம் வந்தது.
(*) பஞ்சீகரணம் => 5 சூக்சம தமோ குணத்தின் கலவை ஸ்தூல பிரபஞ்சம். தத்துவபோதம் என்கிற நூலில் சிருஷ்டி தோன்றிய விதம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
=> ப்ரம்ம சொரூப லக்ஷணங்கள்:
(i) ஸத்யம் (இருத்தல்)
(ii) ஞானம் (அறிதல்)
(iii) அனந்தம் (எல்லையற்றது; ஆனந்தம்)
* அனாத்மாவின் நோக்கில், ஈஸ்வரன் படைத்தவன், நாம் படைக்கப்பட்டவர்கள்.
* ஆத்மாவின் நோக்கில், ஈஸ்வரனும் நானும் ஐக்கியம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------