வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

வேதாந்தம் ஓர் அறிமுகம் - 3

(9) ஸ்ரவணம் (சாஸ்திரம் கேட்டல்):

       உபநிஷத்தில் பேசப்படும் கருத்துக்களை நான்காகப் பிரிக்கலாம்:

       [1] ஜீவ விசாரம்     [2] ஈஷ்வர விசாரம் [3] ஜீவ – ஈஷ்வர சம்பந்தம்       [4] பல விசாரம்


  [1] ஜீவ விசாரம்:

        ஜீவன் – உயிர் வாழ்பவன் (நான்), ஜீவன் = ஆத்மா + அனாத்மா.

        ஆத்மா - சேதனத் தத்துவம், அறிவு, Consciousness

        அனாத்மா - அசேதனத் தத்துவம், அறிவற்றது, ஜட சொரூபம்.

     (i) அனாத்மா


   

   1. ஸ்தூல சரீரம் (உடல்):

        பஞ்ச பூதங்களினால் (ஆகாசம், வாயு, அக்னி, நீர், ப்ருத்வி) செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியம்,  நிறம், பாலினம் முதலிய வேறுபாட்டிற்கு காரணம் அவரவர்களின் கர்ம பலன்.

    ஸ்தூல உடல் அடையும் 6 வித மாறுபாடுகள்:

Ø  அஸ்தி             -  காரணமாக கர்பத்தில் இருத்தல் (தாயினுடைய வயிற்றில்)

Ø  ஜாயதே           - பிறத்தல்

Ø  வர்ததே            - வளர்தல்

Ø  விபரிணமதே   - மாற்றத்தை அடைதல் (வளர்ச்சி நின்ற பிறகு) 

Ø  அபக்ஷீயதே      - தேய்தல்

Ø  வினஷ்யதி        - மடிதல்

போகத்தை அனுபவிக்கும் வீடு ஸ்தூல சரீரம் (போக ஆயதனம்).


   2. சூக்ஷம சரீரம் (மனம்):

       போகத்தை அனுபவிக்கும் கருவி சூக்ஷம சரீரம்(போக சாதனம்).

       19 அவையவங்கள் சேர்ந்தது சூக்ஷம சரீரம். அவை


           


    3. காரண சரீரம் (நிர்விகல்ப சொரூபம்):

       எது ஸ்தூலத்திற்கும், சூக்ஷமத்திற்கும் காரணமோ(எதிலிருந்து ஸ்தூல சூக்ஷமம் வந்ததோ) அதுவே காரண சரீரம். மரத்திற்கு விதை எப்படி காரணமோ அதுபோல. விதையில் கிளை, இலை, கொடி என்ற வேறுபாடு கிடையாது.

         *  நிர்விகல்பம் – விகல்பம் அற்றது – வேறுபாடு அற்றது

         *  எப்போது தோன்றியது எனில் அநாதி, அதாவது அதன் தோற்ற காலத்தை கூற முடியாது.

         

         => பஞ்ச கோஷம்:

               இந்த மூன்று சரீரமும் சேர்த்து ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. அது பஞ்ச கோஷம் எனப்படும். 

               கோஷ: - உறை (அனாத்மா ஆத்மாவை உறை போல மறைப்பதால்)

            (i)  அன்னமய கோஷம் -  ஸ்தூல சரீரம்

            (ii)  பிராணமய கோஷம் – 5 பிராணன் + 5 கர்மேந்திரியங்கள்

            (iii)  மனோமய கோஷம் – மனம் + 5 ஞானேந்திரியங்கள்

            (iv)  விக்ஞானமய கோஷம் – புத்தி + 5 ஞானேந்திரியங்கள்

            (v)  ஆனந்தமய கோஷம் – காரண சரீரம்


    => அவஸ்தா த்ரயம் (ஜீவனுக்குள்ள மூன்று வித அனுபவங்கள்):

       (i)    ஜாக்ரத் – விழிப்பு நிலை (waking state) [ஸ்தூல உடல் வரை அபிமானம் இருக்கும்போது]

       (ii)  ஸ்வப்ந – கனவு நிலை [சூக்சம சரீரம் வரை அபிமானம்]

       (iii)  சுசுப்தி – ஆழ்ந்த உறக்கம் (காரண சரீர அபிமானம்; அறியாமை + ஆனந்தம்)


(ii) ஆத்ம விசாரம்

      ஆத்மா ஞான(அறிவு) சொரூபம்.

     

       ஆத்மாவின் லக்ஷணங்கள்:

(i)   த்ருக் - அறிபவன்

(ii)  சித் – அறிவு மயம்

(iii)  நிர்விகாரம் - மாற்றமற்றது

(iv)  ஏகம் - ஒன்று

(v)   ஸத்யம் - உண்மை


       அனாத்மாவின் லக்ஷணங்கள்:

(i)   த்ருஷ்யம் - அறியப்படுவது

(ii)  ஜடம் – அறிவற்றது

(iii)  ஸவிகாரம் - மாறுவது

(iv)  அனேகம் - பலவானது

(v)   மித்யா – வெறும் தோற்றம்


*  ஆத்மா மற்றும் அனாத்மாவிற்கிடையேயான சம்பந்தம் என்ன? 

    (1) ஸ்படிகம் – மலர்; ஸ்படிகத்தில் எதிரொலிக்கும் மலரின் நிறத்தை போன்று அனாத்மா ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. 

    (2) கயிறு - பாம்பு; மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரியும் பொய்யான பாம்பை போல அறியாமையினால் அதிஷ்டானமான ஆத்மாவின் மீது மித்யாவான அனாத்மா தெரிந்து கொண்டுள்ளது.


[2] ஈஷ்வர விசாரம்:       

      இந்த உலகிற்கு காரணமானவர்.

        ஈஷ்வரன் = ப்ரம்ம (சேதன) + மாயா (அசேதன)


      => ஜட சொரூபமான மாயையின் லக்ஷணங்கள்:

(i)  த்ரி குண ஆத்மிகா (சத்வம், ரஜஸ், தமஸ்)

(ii)  காரண பிரபஞ்சம் (ஸ்தூல, சூக்ஷம, காரணம்)

(iii)  அநாதி ( தோற்றம் கிடையாது)

(iv)   ப்ரம்மாஸ்ரயம் (ப்ரம்மத்தை சார்ந்து உள்ளது, தனித்து செயல்படாது)


    மாயையும், ப்ரம்மமும் சேரும் தத்துவம் => ஜகத் காரணமானவர்




  ஈஷ்வரன் 2 வகையான காரணமாகவும் இருந்து இந்த உலகைப் படைத்துள்ளார்.


   => சிருஷ்டி:

          ஈஷ்வர மாயா அம்சத்திலிருந்து சிருஷ்டி தோன்றுகிறது. 

            காரண நிலை ---> சூக்ஷம நிலை ---> ஸ்தூல நிலை

   பஞ்ச சூக்சம பூத சிருஷ்டி:

           மூன்று குணத்தை (சத்வ, ரஜஸ்,  தமஸ்) உடைய 5 சூக்சம பூதங்கள் தோன்றியது.



  => மூன்று குணங்களின் தன்மைகள்:

         (i) சத்வம்   =>  அறிவு, ஞானம் (Power to know)

         (ii)  ரஜோ  =>  செயல்படும் சக்தி (Activity – Power to act)

         (iii)  தமோ  => ஜட தன்மை


  => பிரபஞ்ச தோற்றம்:

    ஐந்து சூக்சம பூதங்களின்,

         *  சத்வ குணத்திலிருந்து => ஜீவர்களின் அந்தக்கரணம் + 5 ஞானேந்திரியங்கள் வந்தன.

         *  ரஜோ குணத்திலிருந்து => கர்மேந்திரியங்கள் + ப்ராணன் படைக்கப்பட்டது.

         *  தமோ குணத்திலிருந்து => ஸ்தூல சரீரம் வந்தது.  

            (*) பஞ்சீகரணம் => 5 சூக்சம தமோ குணத்தின் கலவை ஸ்தூல பிரபஞ்சம். தத்துவபோதம் என்கிற நூலில் சிருஷ்டி தோன்றிய விதம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


=> ப்ரம்ம சொரூப லக்ஷணங்கள்:

      (i)   ஸத்யம் (இருத்தல்)

     (ii)   ஞானம் (அறிதல்)

     (iii)  அனந்தம் (எல்லையற்றது; ஆனந்தம்)

* அனாத்மாவின் நோக்கில்,  ஈஸ்வரன் படைத்தவன், நாம் படைக்கப்பட்டவர்கள்.

* ஆத்மாவின் நோக்கில்,  ஈஸ்வரனும் நானும் ஐக்கியம்.

பாகம் - 4

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

வேதாந்தம் ஓர் அறிமுகம் - 2

(5) உபாசனை (உபாசனம் (அ) உபாசனா):

       மனதை ஒருமுகப்படுத்துவது, குவிப்பது. உப + ஆசனம் = சமீபத்தில் + இருத்தல். இதன் இலக்கணம்:

* சகுண ப்ரஹ்ம தியான ரூப மானஸ வியாபார: — எடுத்துக் கொண்ட காரியத்தில் தியானம் மூலமாக மனதை வைத்துப் பழக்குதல்(mind activity). கர்த்தாவாக(Master) உள்ள மனதை கரணமாக(servant) மாற்றுவது இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். பொதுவாக வானப்பிரஸ்த காலத்தில் மேற்கொள்ளப்படும் சாதனை இது. இருப்பினும் கிரஹஸ்த காலத்திலேயே தொடங்கப்பட்ட உபாசனை வானப்பிரஸ்த காலத்தில் துணை நிற்கும்.

(i) தியானத்திற்கான முன்னேற்பாடுகள்[Preparations]:

  * அன்னமய கோஷம் (உடல்) – அளவான செயல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைப்பது.

  * அளவான உணவு (அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உண்பது).

  * இந்திரியக் கட்டுப்பாடு – தேவையான விஷயங்களுக்கு மட்டும் கண், காது போன்ற புலன்களுக்குக் கொடுத்தல்; (வானப்பிரஸ்தம் காலத்தில் மௌனம் பிரதானமாக இருப்பது சிறந்தது)

  * அதிக சுக-துக்கம் இல்லாமல் சம பாவனையுடன் இருப்பது.

  * பொறுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும் – less responsibilities.

(ii) தியானம் பழகுதல்[Practicing stages]:

  * உடல், இந்திரியங்களை அமைதிப்படுத்தி அமர்ந்து பழகுதல் - Make it as a habit.

  * எண்ணங்களை கவனித்து மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சி

  * மானஸ பாராயணம் ( forcing your mind to a specific thought)

  * மானஸ ஜபம்

  * உபநிஷத்தில் கூறப்படும் உபாசனம் - மனதை விரிவுப்படுத்தும் முயற்சி

(iii) தியானத்தின் வகைகள்:

  * அமைதிப்படுத்தும் தியானம்[Relaxation meditation]

  * ஒருமுகப்படுத்தும் அல்லது குவிக்கும் தியானம்[Concentration meditation]

  * மனதை விரிவுபடுத்தும் தியானம்[Expansion meditation]

  *  நற்பண்புகளை தியானித்தல்[Value meditation]

  * மேற்கூரிய இந்த நான்கு வகை மட்டுமல்லாது, வேதாந்தத்தில் நிதித்யாசன தியானம் பேசப்படுகிறது. அறிவை மனதில் நிலைபெறச் செய்யும் பயிற்சிக்கு நிதித்யாசனம் என்று பெயர். 


 (6) ஞான யோகம்

       ஞானயோகம் மூன்று படிகளைக் கொண்டது. 

(1) சிரவணம் - சாஸ்திரம் கேட்டல்

(2) மனனம் - சிந்தித்தல், சந்தேகம் தெளிதல்

(3) நிதித்யாசனம் - தியானித்தல், ஞானத்தை நம் மயமாக்குவது

     * ஞானமடைவதற்கும் சாஸ்திரத்திற்கும் இடையேயான சம்பந்தம்:

     (i)  சாத்ய வஸ்து – நம் வாழ்க்கையில் அடையாததை, இல்லாததை அடைதல் (பொருள், வீடு, relaxation…)

     (ii) சித்த வஸ்து – அடைந்ததை அடைவது (already accomplished). அறியாமையில் இழக்கப்பட்ட்தை ஞானத்தின் மூலம் அடைதல்

      மோக்ஷம் என்பது தன்னிறைவைக் குறிக்கின்றது. தன்னறிவினால் உண்டாகும் மனநிறைவைக் குறிக்கின்றது. இது பூர்ணமானது, நிறைவானது.

=> திரிபுடி [மூன்று விதமான வேறுபாடுகள்]:

        * ப்ரமாதா (Subject) – ஞானத்தை அடைய விரும்புவன் ; அறிபவன்

        * ப்ரமேயம் (object) – அடைய விரும்பும் பொருள்

        * ப்ரமாணம் (instrument) – கருவி (பார்த்தல் எனும் செயலுக்கு 'கண்' ப்ரமாணம்)

இங்கு,

பரம்பொருள் பற்றிய அறிவு = பரம்பொருளை அடைதல்

அப்படிப்பட்ட பரம்பொருளான ப்ரம்மத்தை அறியும் ப்ரமாணம் வேதாந்த சாஸ்த்திரம் ஆகும்.


 ஞானயோகத்தின் நிலைகள்[Stages]:

 (i) சிரவணம் – வேதாந்தம் மற்றும் சாஸ்திரம் புரியும் வரை கேட்டல்.

சாஸ்திரத்தின் மையக்கருத்து (தாத்பர்யம்):

[1] ஈஷ்வர ஜகத் ஜீவன்

   *  நம்மை பற்றிய அறிவு

   *  உலகத்தை பற்றிய அறிவு

  *   ஈஷ்வரனைப் பற்றிய அறிவு

[2] ஜீவ ப்ரம்ம ஐக்கிய ஞானம்

                ஜீவாத்மாவும் ஈஷ்வரனும் அடிப்படையில் ஒன்று எனும் அறிவு

[3] ஜகத் மித்யா

      உலகம் வெறும் தோற்றம் (நிலையற்றது) எனும் அறிவு

(ii) மனனம் – சாஸ்திரத்தின் தாத்பர்யம் மற்றும் நமது அனுபவம் ஆகிய இரு ப்ரமாணத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை விசாரம் செய்து சந்தேகம் தெளிதல்.

(iii) நிதித்யாசனம் ஞானத்தில்(தியானம் மூலம்) இருந்து பழகுதல்.

தியானம் உபாசனைக்கும் நிதித்யாசனத்திற்கும் பொதுவானது. ஞானம் அடைவதற்கு முன் மனதை பக்குவப்படுத்தும் தியானத்தை உபாசனை என்றும், ஞானத்திற்கு பின் அடைந்த அந்த ஞானத்தை மனதில் நிலைநிறுத்தும் தியானத்தை நிதித்யாசனம் என்றும் அழைக்கிறோம். ஸ்தித பிரக்ன் - ஞான நிஷ்டையை அடைந்தவன்; முக்தன். ஞ: - அறிபவன், ஞானி.


(7) பக்தி

      இறைவனை நாடுதல், நேசித்தல், பூஜித்தல்

     * சாதகன் – பக்தன்

     * சாத்யம் – அடையப்படும் பொருள்

     * சாதனம் – கருவி

  => பக்தியின் வகைகள்:

        (i) ஷகாம பக்தி (காம்ய பக்தி) 

          * சுகப் பிராப்தி

         * துக்க நிவர்த்தி இவற்றிற்காக செலுத்தப்படும் பக்தி

சுகத்தை அடைவதற்காகவும், துக்கம் நீங்குவதற்காகவும் செய்யப்படும் இவ்வகை பக்தியில், சாதகன் வேறு, சாத்யம் வேறு மற்றும் சாதனம் வேறு. அதாவது பக்தன் எனும் தனியொருவன், தனக்கு தேவையானதை அடைய பகவான் எனும் சாதனத்தை பயன்படுத்துகிறான்.

(ii)  நிஷ்காம பக்தி (கர்ம யோகம்)

              இங்கு சாதகன் பகவானைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு தேவையான மன பக்குவத்திற்காகவென பக்தி செலுத்துகிறான். ஆகவே சாதனமும் பகவான், சாத்தியமும் பகவான். மோட்ஷத்திற்க்குத் தேவையான மனத்தூய்மைக்கு கர்ம யோகம் வழிவகுக்கும்.

(iii)  பரா பக்தி( ஞான லக்ஷண பக்தி)

                 இது ஞானியின் நிலை. இங்கு சாதகன், சாத்யம் மற்றும் சாதனம் இவை மூன்றும் ஒன்றாகிறது. ஈஷ்வரனும் நானும் வேறல்ல என்கிற பாவனையுடன் இருக்கின்ற ஞானி பரா பக்தனாகிறான். 


(8) சாதன சதுஷ்டய சம்பத்தி

       சாதன – தகுதிகள்

       சதுஷ்டய – நான்கு

       சம்பத்தி – அடைய வேண்டும்          

       சம்பந்ந: - அதிகாரி – அதாவது நான்கு தகுதியையும் உடையவன்

   * ஞானயோக சாதனைக்கு முன் அடைய வேண்டிய தகுதிகள்:

   [1] விவேகம் => நித்ய-அநித்ய வஸ்து விவேக:

நிலையானது, நிலையற்றது என பகுத்தறியும் அறிவு. நம்முடைய அனுபவம் மற்றும் பிறரது அனுபவம் வாயிலாக நிலையானது(ப்ரம்மம்) எது, நிலையற்றது(உலகம்) எது என அறிவது. உபாயம் – கர்ம யோகம்

   [2] வைராக்யம்    

         போகத்தில் அதாவது இந்திரிய சுகம் மற்றும் உலகப் பொருட்களில் விருப்பமில்லாத மனநிலை. ஆரம்ப கட்டத்தில் வரும் வெறுப்பினால் தவறில்லை, ஆனால் அது பின்னர் விருப்பற்ற நிலையாக மாற வேண்டும். உபாயம் – அநுதர்சனம்; மீண்டும் மீண்டும் விவேகத்தை விசாரம் செய்தால் வைராக்கியம் பிறக்கும்.

   [3] சமாதி ஷட்க சம்பத்தி:

        இதில் மொத்தம் ஆறு பண்புகள் உள்ளன.

(i) சமம் –> மனக்கட்டுப்பாடு (அ) மனஅமைதி

               * விருப்பு, வெறுப்பு, காமம், கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல்.

               * ஏற்கனவே இருக்கின்ற ஞாபக பதிவுகளிலிருந்து விலகி இருத்தல் நல்லது (Be away from already stored memories). மனமானது இரு விதத்தில் விக்ஷேபத்தை(சஞ்சலம்) அடைகிறது. (1) ஐம்புலன்கள் மூலமாக; (2) அனுபவ மற்றும் ஞாபக பதிவுகள் மூலமாக. இதில் புலன்களைக் கட்டுப்படுத்துதல் தமம். மனதைக் கட்டுப்படுத்துதல் சமம்.

        (ii) தமம் –> இந்திரியக் கட்டுப்பாடு

சஞ்சலப்படும் விஷயத்தில் இந்திரியங்களை செலுத்தாமல் இருத்தல்; ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களுக்கு நல்ல உணவு (feed) கொடுப்பதன் மூலம் மனதுக்கு நல்ல உணவு (feed) கொடுக்க வேண்டும். 

      (iii) உபரமம் – நிலைத்து இருந்து பழகுதல்

              சமத்தையும், தமத்தையும் தொடர்ந்து செய்யும் முயற்சி.

      (iv) திதிக்ஷா – சகித்தல், பொறுமை (endurance)

         சுக - துக்கம் முதலான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்; இது சக்தியுள்ள மனதைக் குறிக்கிறது.

      (v) சிரத்தை(ஸ்ரத்தா:) - நம்பிக்கை (belief)

           குருவினிடத்தும், சாஸ்த்திரத்தினடத்தும்(ஈஷ்வரத்துவம்) வைக்கும் நம்பிக்கை, சிரத்தை ஆகும்.

      (vi) சமாதானம் – லட்சியத்தில் மனதை வைத்தல்

    ஞான யோகம் என்ற சாதனத்தில் மனதை வைத்துப் பழகுதல்

   [4] முமுக்ஷுத்வம்

        மோக்ஷத்தை அடையும் இச்சை; உபாயம் – ஞான யோகம்

பாகம் - 3

-------------------------------------------------------------------------------------------------------------