।।2.25।।
अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ।। २५
அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே ।
தஸ்மாதே3வம் விதி3த்வைனம் நானுசோ1சிதுமர்ஹஸி ।। 25
अयम् அயம் இது(இந்த ஆத்மா) अव्यक्त: அவ்யக்த: வெளித்தோற்றத்திற்கு வராதது(புலன்களால் அறிய முடியாது) अयम् அயம் இது(இந்த ஆத்மா) अचिन्त्य: அசிந்த்ய: சிந்தனைக்கு எட்டாதது
अयम् அயம் இது(இந்த ஆத்மா) अविकार्य: அவிகார்ய: மாறுபடாதது उच्यते உச்யதே சொல்லப்படுகிறது तस्मात् தஸ்மாத் ஆகவே एवम् ஏவம் இங்ஙனம் एनम् ஏனம் இதை विदित्वा விதி3த்வா அறிந்து अनुशोचितुम् அனுசோ1சிதும் துயரப்படுவதற்கு न अर्हसि ந அர்ஹஸி அர்ஹதை(அவசியம்) இல்லை.
இந்த ஆத்மாவானது புலன்களால் அறிய முடியாதது, சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என சொல்லப்படுகிறது. ஆத்மாவை இவ்விதம் அறிந்து துயரத்தை அகற்று.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படா திருக்கக் கடவாய்.
விளக்கம்:
=> வருந்துவது பொருந்தாது:
வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள, புலன்களால் அறியக்கூடிய ஒரு பொருள் வ்யக்தம்(व्यक्त:) எனப்படும். பகவான் இங்கு ஆத்மா புலன்களுக்கு விஷயமாக இல்லாதது(அவ்யக்த:) என்றும் மனதிற்கும் இது விஷயமாக இல்லை(அசிந்த்ய:) என்றும் கூறுகிறார். இது பாகங்கள்(அவையவம்) மற்றும் தன்மைகள் அற்றதாக இருப்பதால் மாற்றமடையாதது(அவிகார்ய:) என சாஸ்திரம் அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது(உச்யதே). ஸத், சித் மற்றும் ஆனந்தம் ஆத்மாவின் தன்மைகள் தானே என ஒருவன் கேட்டால், அது தன்மைகள் அல்ல, லக்ஷணங்கள். அதாவது அதன் இயல்பு, சொரூபம். தன்மை வேறு சொரூபம் வேறு. ஒரு பொருளின் தன்மையை மாற்றலாம் ஆனால் சொரூபத்தை மாற்ற இயலாது.
உடல் மனதை ‘நான்’ என நினைத்து, ஒருவன் தன்னை மரணத்திற்குட்பட்டவனாக, செயல் செய்பவனாக, விஷயங்களை அனுபவிப்பவனாக, சுக-துக்கத்துடன் கூடியவனாக, ஒரு சமயம் மகிழ்ச்சியையும் மறு சமயத்தில் சோகத்தையும் அனுபவிப்பவனாக தவறாக புரிந்துள்ளான். மேற்கூரிய ஸ்லோகங்களிலிருந்து ஆத்மாவை ஸத்-சித்-ஆனந்தமயமானவனாக அறிந்து தனது தவறான புரிதலை கைவிட வேண்டும். க்ருஷ்ணர் அர்ஜுனனிடம், சோகப்பட எக்காரணமும் இல்லை (அனுசோ1சிதும் ந அர்ஹஸி) என்கிறார். ந அர்ஹஸி—இதன் நேரடிப்பொருள் ‘உனக்கு தகுதி இல்லை’. ஆத்மாவிற்கு மரணமில்லை என அறிந்த பின் துயரப்பட ஒருவனுக்கு எந்த தகுதியும் இல்லை.
பீஷ்மர் மற்றும் த்ரோனர் மரணத்தை குறித்த அர்ஜுனனின் துயரத்திற்கு க்ருஷ்ணர் ஆத்மா உண்மையில் அழிவதில்லை. ஆகவே அதற்காக நீ துயரப்படத் தேவையில்லை என பதிலளித்தார். ஒருகால் அர்ஜுனனின் சோகம் அவர்களுடைய அனாத்மாவை குறித்தது எனில் அதற்காகவும் நீ வருந்தத் தேவையில்லை என வரும் ஸ்லோகங்களில் பதிலுரைக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ப்ரம்மம் எப்படிப்பட்டது? அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஸமுத்திரத்தைப் பார்த்திராத ஒருவனுக்கு அது இப்படிப்பட்டதென்று சொல்லும்படி வேறொருவனை நியமித்தால், அவன் ‘அது பெரிய நீர்ப்பரப்பு; எங்குப் பார்த்தலும் ஜலந்தான்’ என்று மட்டுமே சொல்லக்கூடும்.
---------------------------------------------------------------------------------------------------------------।।2.26।। ஆத்மா நித்ய வஸ்துவல்ல என்று வைத்துக் கொண்டாலும் வருந்த தேவையில்லை:
अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि ।। २६
அத2 சைனம் நித்யஜாதம் நித்யம் வா மன்யஸே ம்ருதம் ।
ததா2பி த்வம் மஹாபா3ஹோ நைவம் சோ1சிதுமர்ஹஸி ।। 26
महाबाहो மஹாபா3ஹோ பெரிய தோள்களையுடையவனே
अथ च அத2 ச ஒருவேளை एनम् ஏனம் இந்த ஆத்மா नित्यजातं நித்யஜாதம் என்றும் பிறப்பதாகவும்
नित्यं நித்யம் எப்பொழுதும் मृतम् वा ம்ருதம் வா இறப்பதாகவும் मन्यसे மன்யஸே நினைக்கிறாய்
तथा अपि ததா2 அபி அப்பொழுதும் கூட त्वं த்வம் நீ एवम् ஏவம் இவ்வாத்வாவைக் குறித்து
शोचितुम् சோ1சிதும் துயரப்பட न अर्हसि ந அர்ஹஸி தகுதியற்றவனாவாய்.
ஒருவேளை இந்த ஆத்மா என்றும் பிறந்து என்றும் மடிவதாக நீ நினைத்தால், அப்பொழுதும் கூட, பெரிய தோள்களையுடையவனே இவ்வாத்வாவைக் குறித்து நீ வருந்துதல் பொருந்தாது.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுர் துயருறல் தகாது.
விளக்கம்:
=> வருந்துதல் தகாது:
‘நித்யவஸ்து என எதுவும் இல்லை’ என்பது சார்வாக(லோகாயத) மதத்தினரின் கோட்பாடு.
'ஒரு பேச்சுக்காக' என சொல்வதைப் போல பகவான் இங்கு அதை எடுத்துக் கொள்கிறார். ஒருவேளை ஆத்மா எப்பொழுதும் பிறப்பதாக வைத்துக்கொண்டாலும்(அத2 ச ஏனம் நித்யஜாதம்) அப்பொழுதும் மரணத்தை குறித்து சோகப்பட எதுவுமில்லை. பீஷ்மர் மற்றும் மற்றவர்கள் அனைவரும் வேறொரு உருவத்தில் மீண்டும் பிறப்பார்கள். ஆத்மா எப்பொழுதும் இறப்பதாகக் கொண்டால்(நித்யம் ம்ருதம் வா), மரணத்தை குறித்து ஏன் அழ வேண்டும்? மரணிக்கும் தன்மையுடையது மரணித்தே தீரும் என்ற உண்மை புரிந்தால் அதிலும் துயரப்பட உனக்கு எந்த தகுதியும் இல்லை(த்வம் சோ1சிதும் ந அர்ஹஸி).
-------------------------------------------------------------------------------------जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ।। २७
ஜாதஸ்ய ஹி த்4ருவோ ம்ருத்யுர்த்4ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச ।
தஸ்மாத3பரிஹார்யேऽர்த்தே2 ந த்வம் சோ1சிதுமர்ஹஸி ।। 27
जातस्य हि ஜாதஸ்ய ஹி பிறந்தவனுக்கோ मृत्यु: ம்ருத்யு: மரணம் ध्रुवं த்4ருவம் நிச்சயம்
मृतस्य च ம்ருதஸ்ய ச இறந்தவனுக்கும் जन्म ஜன்ம பிறப்பு ध्रुवं த்4ருவம் நிச்சயம்
तस्मात् தஸ்மாத் ஆகவே अपरिहार्ये अर्थे அபரிஹார்ய அர்த்தே2 பரிகாரம் செய்துகொள்ள(மாற்ற) முடியாத விஷயத்தில் त्वं த்வம் நீ शोचितुम् சோ1சிதும் துக்கப்பட न अर्हसि ந அர்ஹஸி தகுதியற்றவனாவாய்.
பிறப்பவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் நிச்சயமெனில் நீக்க முடியாத இவ்விஷயத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பிறந்தவன் சாவதுறுதி யெனில், செத்தவன் பிறப்ப துறுதி யெனில், இந்த விலக் கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதி யன்று.
விளக்கம்:
=> பொதுவிதி:
இது இன்னும் முக்தியடையாதவர்கள் குறித்து பகவான் கூறும் கருத்தாகும். ஆசையிருக்கும் வரை பிறப்பதும் இறப்பதும் இயல்பு. கர்மவினையின் படி வருகிற சாவை தடுக்க யாராலும் இயலாது. ராமர், க்ருஷ்ணர் முதலிய அவதாரங்களும், தீர்க்கதரிசிகளும் கூட பிறந்ததன் பொருட்டு மரணத்தை அடைந்தவர்களே. பிறந்த உடல் மரணத்தை அடைந்தே தீரும்(ம்ருத்யு: த்4ருவம்).
இங்கு க்ருஷ்ணர் வாழ்க்கையின் பொதுவிதியைக் கூறி, மாற்றமுடியாத விஷயத்தை(அபரிஹார்ய அர்த்தே2) குறித்து வருந்தாதே என்கிறார்.
ஒரு சூழ்நிலையை மாற்ற இயலுமா இயலாதா என கணிக்க முடியாத நெருக்கடியான தருணங்களில், ஏதேனும் செய்து அதை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் மாற்ற முடியாது என்ற அறிவு கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது. ஒருவனுடைய துயரத்திற்குக் காரணம் அந்த சூழ்நிலையல்ல. அதனை ஏற்றுக் கொள்ளாத மனநிலை.
-------------------------------------------------------------------------------------।।2.28।। ஜென்ம மரண லக்ஷணம் கூறப்படுகின்றது:
अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ।। २८
அவ்யக்தாதீ3னி பூ4தானி வ்யக்தமத்4யானி பா4ரத ।
அவ்யக்தநித4னான்யேவ தத்ர கா பரிதே3வனா ।। 28
भारत பா4ரத பாரதா भूतानि பூ4தானி ஜீவராசிகள்(உயிர்கள்)
अव्यक्तादीनि அவ்யக்தாதீ3னி துவக்கத்தில் தென்படாதவைகளாகவும்
व्यक्तमध्यानि வ்யக்தமத்4யானி இடையில் வெளித்தோற்றத்திற்கு வந்தவைகளாகவும்
अव्यक्तनिधनानि एव அவ்யக்தநித4னானி ஏவ இறுதியில் காணப்படாதவைகளாகவும் இருக்கின்றன
तत्र தத்ர அந்த விஷயத்தில் का கா என்ன परिदेवना பரிதே3வனா துக்கம்.
பாரதா, உயிர்கள் முதலில் தோற்றத்திற்கு வராதவைகளாகவும், இடையில் தென்படுபவைகளாகவும், இறுதியில் தென்படாதவைகளாகவும் இருக்கின்றன. இதைக் குறித்து என்ன துக்கம்?
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதி தெளிவில்லை. இதில் துயர்ப் படுவதென்னே?
விளக்கம்:
=> அவ்யக்தமே மூலம்:
ஜென்ம - உற்பத்தி; தோன்றும் அனைத்திற்கும் காரணம் என ஒன்று கண்டிப்பாக இருக்கும். உ., பானைக்கு களிமண் போல. காரணம் என்பது ஜென்மத்திற்கு(தோற்றத்திற்கு) முன் உள்ள நிலை. அந்நிலையிலிருந்து எந்த ஒன்று வேறுபாட்டை அடைகின்றதோ அது ஜென்ம(manifestation) எனப்படும். உதாரணமாக, விதை காரண நிலை; அதிலிருந்து தளிர், வேர், இலை மற்றும் கிளை போன்ற வேறுபாட்டுடன் வெளிவருவது வ்யக்தம்; ஜென்ம. இது புலன்களால் அனுபவிக்கப்படும் நிலை.
அவ்யக்தம் = வெளித்தோற்றத்திற்கு வராமலிருக்கும் நிலை.
ஆகவே,
அவ்யக்தம் —> வ்யக்தம் = ஜென்மம்
வ்யக்தம் —> அவ்யக்தத்திற்குள் செல்வது = மரணம்
உடலின் வ்யக்தத்திற்கு ஆதாரமாக இருப்பது பஞ்ச பூதங்கள். மரணத்திற்குப் பின் உடல் பஞ்ச பூதமாக மாறுகிறது. சரீரத்தின் தோற்றம், ஸ்திதி மற்றும் லயம் பஞ்ச பூதத்தில் நடைபெறுகிறது. சூக்ஷம சரீரம் காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
பகவானிடம் ப்ரபஞ்சம் ஒடுங்குதல் அவ்யக்தம் எனப்படும். உண்மையில், உலகில் எந்த ஒன்றிற்கும் நாசம் என்பதே கிடையாது. உருமாற்றமே நடைபெறுகிறது. இந்த மாற்றத்தையே நாம் தோற்றம் என்றும், மரணம் என்றும் கூறுகிறோம். இல்லாத ஒன்றை யாராலும் உருவாக்க முடியாது. இருக்கும் ஒன்றே வெளித்தோற்றத்திற்கு வருகிறது, தோற்றத்திலிருந்து ஒடுக்கத்தை அடைகிறது. மரணம் என்பதும், ஜென்மம் என்பதும் கிடையாது. எல்லாவற்றிற்கும் அவ்யக்தம் ஒரே மூலம். ஆகவே துயரப்பட வேண்டிய அவசியமில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------
।।2.29।। ஆத்ம ஞானத்தின் பெருமை:
अाश्चर्यवत्पश्यति कश्चिदेनं अाश्चर्यवद्वदति तथैव चान्य: ।
अाश्चर्यवच्चैनमन्य: शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ।। २९
ஆச்1சர்யவத்பச்1யதி கச்1சிதே3னம்
ஆச்1சர்யவத்3வத3தி ததை2வ சான்ய: ।
ஆச்1சர்யவச்சைனமன்ய: ச்1ருணோதி
ச்1ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்1சித் ।। 29
कश्चित् கச்1சித் ஒருவன் एनम् ஏனம் இந்த ஆத்மாவை अाश्चर्यवत् ஆச்1சர்யவத் ஆச்சரியமானது போல पश्यति பச்1யதி காண்கிறான் तथा एव च ததா2 ஏவ ச அங்ஙனமே अन्य: அன்ய: இனியொருவன்
अाश्चर्यवत् ஆச்1சர்யவத் ஆச்சரியம் போல वदति வத3தி பேசுகிறான் अन्य: च அன்ய: ச வேறொருவன் एनम् ஏனம் இந்த ஆத்மாவை अाश्चर्यवत् ஆச்1சர்யவத் ஆச்சரியம் போல शृणोति ச்1ருணோதி கேட்கிறான் कश्चित् च கச்1சித் ச மற்றும் ஒருவன் श्रुत्वा अपि ச்1ருத்வா அபி கேட்டாலும்
एनम् ஏனம் இந்த ஆத்மாவை न एव वेद ந ஏவ வேத3 அறிகிறதேயில்லை.
ஒருவன் இந்த ஆத்மாவை ஆச்சரியமானது போல காண்கிறான், அங்ஙனமே இனியொருவன் ஆச்சரியம் போல பேசுகிறான், வேறொருவன் ஆச்சரியம் போல கேட்கிறான், மற்றொருவன் கேட்டும் இந்த ஆத்மாவை அறிகிறதேயில்லை.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
இந்த ஆத்மாவை
வியப்பென ஒருவன் காண்கிறான்,
வியப்பென ஒருவன் சொல்லுகிறான்,
வியப்பென ஒருவன் கேட்கிறான்,
கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.
விளக்கம்:
=>கடோபநிஷத்தில் கூறப்பட்ட மந்திரத்தின் ஒரு கருத்தை விளக்குகிறார்.
~> ஆத்மன: து3ர்போ3த4த்வம்(अात्मन: दुर्बोधत्वम्) - ஆத்ம தத்துவத்தை க்ரஹிப்பது சுலபமல்ல.
~> குரு சிஷ்ய து3ர்லபத்வம்(गुरु शिष्य दुर्लभत्वम्) - இத்தத்துவத்தை உபதேசிக்கும் குருவும், அதை அறிய விருப்பும் சிஷ்யனும் அரிது.
=> வியப்பிற்குரியது ஆத்மா:
ஆச்1சர்யம்(अाश्चर्य) - வியப்புக்குரியது; அசாதாரணம்; கடினம்; அரிதானது. பொதுவாக, எல்லா விஷயங்களிலும், அறிபவனாகிய ‘நான்’ இதை அறிகின்றேன் என அறிபவனிடமிருந்து அறியப்படும் பொருள் வேறானதாக இருக்கும். ஆனால் ஆத்ம விஷயத்தில், அறியப்பட வேண்டிய ஆத்மாவை அறிபவனாக அறிய வேண்டியுள்ளதால் இந்த ஞானம் அசாதாரணம்; ஆத்ம ஞானம் ஆச்சர்யம்.
சாஸ்திர விசாரத்திற்கு பின், ‘ நான் புதிதாக எதையும் தெரிந்து கொள்ளவில்லை’ என்ற அறிவு கிடைக்கிறது. அதாவது எவனொருவன் இதுவரை எல்லாவற்றையும் அறிந்தானோ, எவன் நான்… நான்… என சொல்லும் போது அதன் அர்த்தமாக இருந்தானோ அதுவே ஆத்மா. ஆகவே புதிதாக எதையும் தெரிந்து கொள்ளவில்லை என உணர்தல் ஆச்சர்யம். ஆத்ம ஞானி ஆச்சர்யம்.
ஒரு பொருளுக்கு ஏதாவது குணமிருந்தால், செயலிருந்தால், சம்பந்தமிருந்தால் அதை விளக்கலாம். ஆனால் நிர்குணமான, வாக்கினால் விளக்கிக் கூற முடியாத ஆத்மாவை விளக்குதல் ஆச்சர்யம். ஆகவே ஆத்ம ஞான உபதேசம் ஆச்சர்யம்.
எல்லா விதத்திலும் ஆத்மா ஆச்சரியமானதாகவே உள்ளது. எல்லையற்ற ஸத்-சித்-ஆனந்தமான ஆத்மா, எந்த மாற்றத்தையும் அடையாமல் நாம-ரூப மயமான இவ்வுலகை தோற்றுவித்துள்ளது. எல்லா நாமரூபங்களும் ப்ரம்மமே. ஆத்மாவாகிய நீ ப்ரம்மாக இருக்கிறாய் என உபதேசிக்கும் குரு ஆச்சர்யம்.
இயற்கையாகவே எல்லா ஜீவராசிகளும் இருமை எனும் ஸம்ஸாரத்துடனே பிறக்கிறார்கள். விடுதலை அடைய வேண்டும் என்ற விருப்பமும் சுபாவமாகவே உள்ளது. ஆனால் அதற்கான சாதனம் சாஸ்திரத்தை கேட்டல் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே கேட்டல்(ஸ்ரவணம்_श्रवणम्) ஆச்சர்யம். கேட்பவர்கள் ஆச்சர்யம்.
=> இங்கு கிருஷ்ணர், சிலர்(கச்1சித்) இந்த ஆத்மாவை(ஏனம்) ஆச்சர்யத்தை போல(ஆச்1சர்யவத்) பார்க்கிறார்கள்(பச்1யதி) என ஆரம்பித்து, வேறு எவையெல்லாம் இவ்விஷயத்தில் வியப்பிற்குரியதாக இருக்கிறது என கூறுகிறார். இங்கு பார்த்தல் என்பதன் பொருள் அறிதல். உ., கேட்டுப் பார்த்தாயா? என்பது கேட்டு அறிந்தாயா? என பொருள். ஆகவே, இந்த ஆத்மாவை அறிதல் ஆச்சர்யமானதாக பார்க்கிறார்கள்(ஏனம் கச்1சித் ஆச்1சர்யவத் பச்1யதி) என்றும் அல்லது ஆச்சர்யத்தை போல சிலரே இந்த ஆத்மாவை அறிகிறார்கள்(ஆச்1சர்யவத் கச்1சித் ஏனம் பச்1யதி) என்றும் பொருள் கூறலாம். இதைப் போலவே ஆத்ம உபதேசமும், அதை உபதேசிப்பவரும், அதை கேட்பவனும் ஆச்சர்யம். மேலும், இந்த முழு உபதேசத்தைக் கேட்டும்(ச்1ருத்வா அபி) ஆத்மாவை(ஏனம்) புரிந்து கொள்ளாதவனையும்(ந ஏவ வேத3) பகவான் வியப்பானவனாகவே சொல்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
வேதங்கள், தந்த்ர சாஸ்திரங்கள், புராணங்கள் ஆகிய உலகிலுள்ள எல்லாக் கிரந்தங்களும் வாயினின்று துப்பிய சோற்றைப்போல் எச்சிலாகிவிட்டன என்று சொல்லலாம். ஏனெனில், அவைகள் அடிக்கடி மனிதர்களுடைய வாயினால் உச்சரிக்கப்படுகின்றன. அகண்ட ஸ்வரூபமான பிரம்மமோ அப்படி ஒருபோதும் எச்சிலானதில்லை. ஏனென்றால், இதுவரையில் வார்த்தைகளால் அதை விவரித்துச்சொல்ல ஒருவராலும் முடியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------
।।2.30।। மேற்கூரிய ஆத்ம-அனாத்ம விவேகத்தின் முடிவுரை:
देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत ।तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ।। ३०
தே3ஹீ நித்யமவத்4யோऽயம் தே3ஹே ஸர்வஸ்ய பா4ரத ।
தஸ்மாத் ஸர்வாணி பூ4தானி ந த்வம் சோ1சிதுமர்ஹஸி ।। 30
भारत பா4ரத பாரதா सर्वस्य देहे ஸர்வஸ்ய தே3ஹே எல்லாருடைய தேஹத்திலும் अयम् அயம் இந்த
देही தே3ஹீ தேஹத்தை உடைய ஆத்மா नित्यम् நித்யம் எப்போதும் अवध्य: அவத்4ய: அழிக்கப்படாதது तस्मात् தஸ்மாத் ஆகையினால் त्वं த்வம் நீ सर्वाणि भूतानि ஸர்வாணி பூ4தானி எல்லா உயிரினங்களைக் குறித்து शोचितुम् சோ1சிதும் துக்கப்பட न अर्हसि ந அர்ஹஸி அர்ஹதை கிடையாது.
பாரதா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன், ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா.
விளக்கம்:
=> துக்க காரணம் எதுவுமில்லை:
க்ருஷ்ணர், ஸ்லோகம் 11-லிருந்து தான் கூறியதை சுருங்கச் சொல்லி முடிவுரை செய்கிறார். தேஹத்தை உடைய உயிரினங்களுக்குள்(ஸர்வஸ்ய தே3ஹே) உள்ள தேஹீயான ஆத்மா(தே3ஹீ) எப்போதும் அழிக்கப்பட முடியாதது(நித்யம் அவத்4ய:). தனது கூற்றை நிரூபிக்கும் எல்லாவித விவாதத்தையும் செய்துவிட்டார். உடல் அநித்யமானது ஆகையால் அதனுடைய மரணத்தை தடுக்க முடியாது. மேலும் தேஹியான நித்ய-ஆத்மாவை எப்போதும் அழிக்க முடியாது. ஆகவே பாரமார்த்திக நிலை மற்றும் வ்யாவஹாரிக நிலை என்ற இவ்விரு விதத்திலும் சோகப்பட எந்தக் காரணமுமில்லை என கூறி அர்ஜுனா, எல்லா உயிரினங்களைக் குறித்து(ஸர்வாணி பூ4தானி) நீ வருந்தத் தேவையில்லை(த்வம் சோ1சிதும் ந அர்ஹஸி) என்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
யாரோ தன்னை துண்டு துண்டாக வெட்ட வருவதாக ஒருவன் கனவு காண்கிறான். பயந்து போய் உளறிக் கொண்டு அவன் விழிக்கின்றான். கதவு உட்பக்கமாகவே தாளிடப்பட்டிருப்பதையும், உள்ளே யாருமில்லை என்பதையும் அறிகிறான். என்றாலும் அவன் நெஞ்சு சற்றுநேரம் வரையில் படபடத்துக் கொண்டேயிருக்கும். இது தேஹத்தின் மீது கொண்டுள்ள அபிமானத்தின் அடையாளமாம்.
-------------------------------------------------------------------------------------